Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கொல்கத்தா: மேற்குவங்கம் உதயமான நாள் ஆக இன்று கொண்டாடுவதற்கு அம்மாநில ஆளுநர் மாளிகையில் இன்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளர்.
அதில், மேற்குவங்கம் உதயமான நாள் என்று கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். radcliffe ஒப்பந்ததின் அடிபடையில் இந்திய தன்னட்சி அந்தஸ்து பெற்றபோது மேற்குவங்கம் உருவானதாக மம்தா கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மேற்கு வங்கம் நாள் எதுவும் தனியாக கொண்டாடியது இல்லை என்று மம்தா பானர்ஜி சுட்டுகாட்டுயுள்ளார்.
எனவே மேற்குவங்கம் உதயமான நாளாக ஆளுநர் மாளிகையில் கொண்டாடுவது தேவையற்ற குழப்பத்தையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும் என மம்தா தெரிவித்துள்ளர்.
மாநில அரசின் முன் அனுமதியின்றி இதுபோன்ற நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது ஒட்டுமொத்த மாநில மக்களை அவமதிக்கும் செயல் என்று மம்தா சாடியுள்ளார்.